சிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கு அருகில் உள்ள பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் ஆலோசனைக்காகப் பயணம் செய்து வந்த இரண்டு ஈரானிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் இறுதி ஊர்வலம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்றது. இதில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.